Friday, December 3

என் நண்பர் ஒருவரிடம் நான் கலந்துரையாடியபோது
எம் மக்களிடம் ஒற்றுமை இல்லை
எம் மக்களுக்கு உரிமை இல்லை
எம் மக்களிடம் உணர்வு இல்லை
எம் மக்களின் விடியலில் வெளிச்சம் இல்லை
என நான் ஆதங்கப்பட்டபோது நண்பர் சொன்னார்
சந்தாதாரர் ஆகிவிடுங்கள் உங்கள் கையில்
மாதந்தோறும் கிடைக்கும் பத்திரிக்கை வடிவில் என்றார்
எல்லாமே வெறும் பேப்பர்களில் இருப்பதால்தானோ என்னவோ
கைகள் வரை மட்டுமே அது இருந்து விடுகிறது.
ஆனால் சமூகத்திற்கு...............
பிறகு எங்கே எம்மக்களுக்கு உரிமையை தேடி தந்து
ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி
எம்மக்களின் வைகறையிலே வெள்ளி தருவார்கள்
எம் சமூக தலைவர்கள்....................

No comments:

Post a Comment