
ஊர்முழுக்க நடந்து
உறவுக்கார வாசல்தட்டி
இரவல் பணம்வாங்கி
கண்ணீர்த் துளிகளில்
உறவுகள் வழியனுப்ப
திரவியம் தேடி
கடல்கடந்த பயணம்
சுட்டெரிக்கும் கதிரவன்
சுற்றிவரும் அனல்காத்து
வீதியெல்லாம் வெந்தமணல்
புலரியில் புறப்பட்டு
சாயங்காலம் கூடுதிருப்ப்ம்
இரைதேடிப் பறவைகள்போல்
மரமில்லா காட்டுல
ஒட்டகம் மேச்சும்
ஆள்தெரியா உயரத்தில
கட்டிடம் கட்டியும்
ரோட்டோர குப்பைகளை
பொருக்கி சுத்தம்செய்தும்
குளிர்பெட்டி அறைக்குள்ள
அசையாம குத்தவசும்
ராத்திரி பகல்
ஓடுறது தெரியாம
தாய்தந்த உசிரைசும்
நாடுதந்த அறிவையும்
அடுத்தவனுக்கு அடியரவச்சு
மாசப்பொரப்பில வாங்கிற
சம்பள பணத்தை
இரவலுக்கு தவணையும்
வீட்டுச் செலவுக்கும்
பிரித்து அனுப்பி மீதத்த
மாச சாப்பாட்டிற்கெடுத்து
வருஷங்கள் கடத்தி
கிடைக்கிற விடுப்பில
சிறைகளை உடைத்து
தாய்நாட்டுப் பயணம்
யார் இந்த மாமான்னு
பெத்தபுள்ள கேட்கையில
நெஞ்சுகொதிக்க வாரியணைத்து
இறந்தவங்க பொறந்தவங்க
விசேஷங்கள் கேட்டும்
சொந்த மண்ணில
ஊரோடும் உறவோடும்
நாட்களை எண்ணி
உறவாடிக் கொண்டு
மீண்டும் சிறைதேடி
தொடரும் பயணமுடிவில்
தேடியதையும் துலைத்ததையும்
கூட்டிப் பார்கையில்
பருவங்கள் உதிர்ந்தும்
குருதிநாளங்கள் சுண்டியும்
நோய்கள் சிறைபிடித்தும்
சேர்த்த பேங்க் பணத்தில
உணவாக மருந்துண்டு
மாளிகை வீட்டில்
மரணம் வரும்வரை
மீத வாழ்க்கை
உணவாக மருந்துண்டு
ReplyDeleteமாளிகை வீட்டில்
மரணம் வரும்வரை
மீத வாழ்க்கை
very good words